காவல் ஆணையரிடம் ஸ்டுடியோ உரிமையாளர் புகார்
கோவை, அக்.11– புகைப்பட ஸ்டுடியோ வில் உள்ள கணினியில் வைரஸ் கிருமிகளை ஏற்றி, அதனை நீக்க அமெரிக்கா டாலர் கேட்டு நூதன மோச டியில் ஈடுபடுவதாக பாதிக் கப்பட்ட ஸ்டுடியோ உரி மையாளர் கணினியின் பாகத்துடன் வந்து கோவை மாநகர துணை ஆணைய ரிடம் மனு அளித்தனர். கோவை ஆவாரம் பாளையம் பகுதியில் அன்பு போட்டோஸ், வீடியோஸ் ஸ்டுடியோ நடத்தி வருபவர் நா.முத்துக்குமார். இவர் கடந்த 2 ஆம் தேதியன்று திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் மற்றும் தொழில் சம்மந்தமான புகைப்படங்கள், வீடியோக்கள் எடிட் செய்யும் கணினியில் இருந்த அனைத்து பைல்களும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், ஒவ் வொரு பைலையும் பழைய முறைக்கு மாற்றித்தர 970 அமெரிக்கா டாலர் தர வேண்டும் என்ற குறிப்புடன் கோடிங்க் முறையில், இமெயில் முகவரிடன் கூடிய ஒரு பைல் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் ஹேக்கர்கள் மோசடி என்பதை உறுதி செய்தார். சுமார் 3 டி.பி. அளவிலான பைல்கல் ஹேக் செய்யப்பட்ட கணினியில் உள்ளதாகவும், சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் மன உளைச்சலுக்கும், பொருளா தார பாதிப்புக்கும் ஆளாகி உள்ளதாக கூறி, ஹேக்கிங்கால் பாதிக்கப்பட்ட முத்துக்குமார் கோவை மாநகர காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையரிடம் மனு அளித்தார். அந்த மனுவை சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்படும் என துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.