சொத்தைப் பறித்து அடித்து விரட்டிய மகன்
திருப்பூர், செப். 16 – சொத்தைப் பறித்துக் கொண்டு அடித்து, உதைத்து, விரட்டிய மகனிடமிருந்து தனது சொத்தை மீட்டுத் தரக் கோரி ஊத்துக்குளி யைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ஆட்சியரகத்திற்கு வந்து உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்கு ளிக்க முயன்றார். திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளி நகர கிழக்கு வீதியைச் சேர்ந் தவர் கே.ஆர்.ஜெயபாலன். இவ ருக்கு இரு மகன்கள். முதல் மகன் துரைராஜ், இரண்டாவது மகன் சக்கரபாணி. இருவருக்கும் திரு மணம் ஆகிவிட்டது. முதல் மகன் துரைராஜ் அண்மையில் உயிரி ழந்துவிட்ட நிலையில், அவரது மனைவி டி.கவிதா ஊத்துக்குளி யில் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். ஜெயபாலனின் இரண் டாவது மகனான சக்கரபாணி அரசுப் பள்ளி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். அவருடன் ஜெயபாலன் இருந்தபோது சொத்து, பணம் எல்லாவற்றையும் அவர் பெயருக்கு மாற்றிவிட்ட தாகவும், தன்னை மகன் அடித்து உதைப்பதாகவும் கூறினார். இந்நிலையில் தனது மூத்த மருமகள் கவிதாவுடன் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்களன்று மனு கொடுப்பதற்காக ஜெய பாலன் வந்திருந்தார். பகல் 1 மணி யளவில் திடீரென அவர் மறைத்து வைத்து கொண்டிருந்த மண் ணெண்ணெய் கேனை திறந்து உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டார். சட்டைப் பையில் தீப்பெட்டி வைத்திருந் தார். அவர் தீக்குளிக்க முயன்ற தைப் பார்த்தவுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவ லர்கள் விரைந்து ஓடி வந்து அவரைப் பிடித்துக் கொண்டு, தனியாக கூட்டிச் சென்றனர். அவர் மீது தண்ணீரை ஊற்றி விட்டனர். சட்டைப் பையில் இருந்த தீப்பெட்டியையும் பறித்து வீசினர். அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டனர். இச்சம்பவத்தை எதிர்பார்க்காத மருமகள் கவிதா, ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கண்ணீர் விட்டு அழுதார். ஜெயபாலன் கொண்டு வந்தி ருந்த கடிதத்தில், என்னை என் மகன் ஏமாற்றிவிட்டான். என் மகன் சக்கரபாணி அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளான். சொத்து போச்சு, பணம், நகை, இடம் போச்சு, சோறு இல்லை, துணி இல்லை, மருந்து இல்லை. நான் செத்துப் போறேன். எனக்கு வாழ வழி இல்லை. நம்பி ஏமாந் தேன். என்னை அடித்தான், உதைத்தான். மனம் வலி, உடம்பு வலிக்கிறது. எனக்கு என் சொத்து வேணும் என எழுதி கையெழுத்துப் போட்டிருந்தது. அவர்கள் கொண்டு வந்தி ருந்த மனுவை ஆட்சியரிடம் ஒப்படைத்தனர். இவர்களுடன் வந்திருந்த வழக்கறிஞர் அக்டிப் ஷா கூறுகையில், மும்பை உயர் நீதிமன்றம், பெற்றோரை கவனிக் காமல் வாரிசுகள் விரட்டி விட் டால், அவர்களது சொத்தை பறி முதல் செய்து மீண்டும் பெற்றோ ரிடம் ஒப்படைக்க தீர்ப்பளித்து இருக்கிறது. அதன்படி ஜெய பாலன் சொத்தை மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக் கத்தான் வந்தோம். ஆனால் அவர் யாரும் எதிர்பாராதபடி தீக்குளிக்க முயன்றது அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.