கோவை, மார்ச் 10 – நூறுநாள் வேலை திட்டத்தை மத்திய அரசு திட்டமிட்டு முடக்குவதாக குற்றம்சாட்டி கோவை யில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தி னர் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.துரைசாமி தலைமை தாங்கினார். கோரிக் கைகள் குறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்வராஜ் உரையாற்றினார். போராட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் காளப்பன் உரை யாற்றினார். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு முடக்குவதை கண்டித்தும், வேலை நாட்களை 250 நாட்களாக உயர்த்த வேண்டும். விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ரூ.600 தினக்கூலி வழங்க வேண்டும். நூறுநாள் வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப் பித்த விவசாய தொழிலாளர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் கொடுத்த பட்டா விற்கு நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.