tamilnadu

கொடுமுடி: ரூ.78 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

ஈரோடு, மே 9-கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 78,16,388க்கு வேளாண்விளை பொருள்கள் விற்பனை நடைபெற்றது.ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டாரத்துக்குட்பட்ட பகுதிகளிலிருந்து ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு 24,354 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். தேங்காய் ஒன்று அதிகபட்ச விலையாக ரூ.25.02- க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.10-க்கும்ஏலம் போனது. 316 மூட்டைகளில் தேங்காய் பருப்பு ரூ.11,91,831- க்கு விற்பனையானது. இதில் முதல்தர தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.91.25க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ. 84.69-க்கும், இரண்டாம் தரத்திற்கு அதிகபட்சமாயாக ரூ.83.19- க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.55-க்கும் ஏலம் போனது.இதேபோல் எள் 792 மூட்டைகளில் கொண்டுவரப்பட்டிருந்தது. இது ரூ. 64,60,958- க்கு விற்பனையானது. இதில் சிகப்பு ரக எள்ளின் அதிகபட்ச விலை ரூ.116.91க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ. 98.71க்கும், கருப்பு ரகஎள் அதிகபட்சமாக ரூ.120.69க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.116.91-க்கும் ஏலம் விடப்பட்டது.

;