திருப்பூர், நவ. 28 – திட்டவட்டமான நிலைமை யைப் பற்றிய திட்டவட்டமான ஆய்வு செய்து எடுக்கும் நிலை பாடுதான் இடது திரிபுவாதம், வலது திருத்தல்வாதம் ஆகிய தவறுகளில் இருந்து தடுக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் கூறி னார். திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில், கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் 100 ஆண் டுகள் என்ற தலைப்பில் 10 நாள் தொடர் வகுப்பு நடத்தப்பட்டு வரு கிறது. இதில் ஐந்தாம் நாளான வியாழக்கிழமை “திருத்தல், திரிபுவாதத்திற்கு எதிரான தத்துவார்த்த நிலை” என்ற தலைப்பில் கே.கனகராஜ் உரை யாற்றினார். இந்த அமர்வுக்கு கட்சியின் மாவட்டக்குழு உறுப் பினர் ச.நந்தகோபால் தலைமை வகித்தார். இதில் பேசிய கனகராஜ் கூறும் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வரலாறு நெடுகிலும் இந்திய பெருமுதலாளி வர்க்கம் என எதிரி வர்க்கத்தை மதிப்பிடு வதிலும், தேசிய இனப் பிரச்சனை, சுய நிர்ணய உரிமை உள்ளிட்ட ஒவ்வொரு பிரச்சனையிலும் இடது திரிபுவாதம், வலது திருத் தல் வாதத்திற்கு எதிரான தொடர் போராட்டம் நடத்தி சரியான நிலை எடுத்துள்ளது. எதிரிகளை குறைத்து மதிப் பிடுவதும், நமது சொந்த பலத்தை மிகைப்படுத்தி மதிப்பிடுவதும் அதன் அடிப்படையில் நடைமு றையை வகுப்பதும் திருத்தல் வாதத்திற்கும், திரிபுவாதத்திற்கும் இட்டுச் செல்லும். இந்த இரு தவ றுகளும் முடிந்துபோன விசய மல்ல, தொடர்ச்சியாக எல்லா விசயங்களிலும் இந்த இரு தவறு களை எதிர்த்துப் போராடித்தான் முன்னேற வேண்டும். அதற்கு திட்டவட்டமான நிலைமை பற் றிய திட்டவட்டமான ஆய்வு செய்ய வேண்டும் என மாமேதை லெனின் கூறியிருக்கிறார். அதன் படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டு வருகிறது என்று கன கராஜ் கூறினார். இந்த அமர் வில் திரளானோர் கலந்து கொண் டனர்.