tamilnadu

img

குடிமங்கலம் அருகே வெறிநாய் கடித்ததில் 20 பேர் படுகாயம்

உடுமலை, ஆக. 23- குடிமங்கலம் அருகே வெறிநாய் கடித்ததில் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடுமலை அருகே உள்ள குடி மங்கலத்தில் பேருந்து நிலையம் உள்ளது. இதன் அருகில் உடுமலை, தாராபுரம், திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் நான்கு வழி சாலை சந்திப்பு பகுதி வெள்ளியன்று காலை பரப ரப்பாகக் காணப்பட்டது. வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு அலு வல்களுக்கு செல்வதற்காக மக்கள், பயணிகள் ஏராளமானோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அப் பகுதிக்கு வந்த வெறி நாய் ஒன்று பயணிகளைத் துரத்தி, துரத்தி கடித்தது. இதனால் அச்சமடைந்து பேருந்து நிலையத்தில் இருந்த வர்கள் சிதறி ஓடினர். ஆயினும் கொள்ளுப்பாளையம் கந்தசாமி (70), கோட்டமங்கலம் சமத்துவ புரம் பிரவீன்குமார் (26),வடுக பாளையம் குப்புசாமி(75), குடி மங்கலம் மோகன்ராஜ் (41) உள் ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் வெறிநாய்க்கடிக்கு ஆளாகி படு காயமடைந்தனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்  கடிபட்டு காயம்பட் டவர்களை மீட்டு, சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத் தால் குடிமங்கலம் பகுதியில் பரபரப்பு நிலவியது.