tamilnadu

அதிமுக கொடிக் கம்பம் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மேலும் 2 அறுவை சிகிச்சைகள்

கோவை, நவ. 17- கோவையில் அதிமுக கொடிக்கம் பம் சாய்ந்ததில் காலை இழந்த ராஜேஸ்வரிக்கு மேலும் 2 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கோவை அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் கடந்த 11 ஆம் தேதி சாலையோரத் தில் நடப்பட்டிருந்த அதிமுக கொடி கம்பம் சாய்ந்ததில் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்கிற அனுராதா படுகாயமடைந்தார்.  அதி முக கொடிக்கம்பம் சாய்ந்ததே இவ் விபத்திற்கு காரணமென உறவினர் கள் குற்றம்சாட்டியிருந்தனர். இந் நிலையில் தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட ராஜேஸ்வரி யின் ரத்த நாளங்கள் சிதைந்ததால் இடது கால் அகற்றப்பட்டது.  இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து பேட்டியளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கிருஷ்ணானந்தா கூறியதாவது, தீவிர கண்காணிப்பில் உள்ள ராஜேஸ்வரியின் ரத்தநாளம் பாதிக் கப்பட்டுள்ளதால் நோய் தொற்று  ஏற்படுவதைத் தடுக்க காலை துண் டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 அறுவை சிகிச்சைகள் செய் யப்பட்டுள்ள நிலையில் மேலும் வலது காலில் எலும்பு முறிவு உள்ளதால், இன்னும் இரண்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். தொடர்ந்து 72 மணிநேரம் தீவிர கண்காணிப்பு தேவைப்படலாம் எனவும் கூறிய அவர், ராஜேஸ்வரிக்கு செயற்கைகால் பொருத்த முடியும் எனவும் தெரிவித் தார்.