tamilnadu

img

திருப்பூரில் 15ஆவது கட்டுமானப் பொருள்கள் கண்காட்சி

 திருப்பூர், ஜூலை  27- திருப்பூரில் கட்டடப் பொறி யாளர்கள் சங்கத்தில் 15ஆவது கன்ஸ்ட்ரோ மெகா 2019 கண்காட்சி தாராபுரம் சாலையில் உள்ள வித்யா கார்த்திக் திருமணமண்டபத்தில் வெள்ளியன்று துவங்கியது.  இக்கண்காட்சியை மாவட்ட  ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி துவக்கி  வைத்தார். திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் குத்துவிளக்கேற்றினார். கண்காட்சி வரும் ஜூலை 29 ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. இந்தக் கண் காட்சியில் 180 அரங்குகள் அமைக் கப்பட்டுள்ளது. இங்கு  கட்டிட கட்டு மானத்திற்குத் தேவையான சிமெண்ட், கம்பி, செங்கல், ஆர்எம்சி காங்கிரீட், கதவு, ஜன்னல், கிரானைட், டைல்ஸ், மின்சாதனப் பொருட்கள், பிளம்பிங் பொருட்கள், குளியலறைப் பொருட்கள், சூரிய சக்தியில் இயங்கும் கட்டிட சாதனங்கள், சமை யலறை அலங்காரம், உட்புற, வெளிப் புற அலங்காரம், பெயிண்ட் ஆகிய வற்றின் தயாரிப்பாளர்கள், விற்பனை யாளர்கள் ஒரே கூரையின் கீழ் பங் கேற்று உள்ளனர்.  மேலும்,  திருப்பூர் மாநகராட்சி யுடன் இணைந்து மழைநீர் சேமிப்பு பற்றி விழிப்புணர்வை உருவாக்க தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.  லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் வடக்கு,  லயன்ஸ் கிளப் ஆஃப் திருப்பூர் மெல்வின் ஜோன்ஸ் உடன் இணைந்து  அக்குபஞ்சர், சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை முகாமை மருத்துவர் எஸ்.குமார ரத்தினம் தலைமையில் நாள்தோறும் மாலை 4 மணி முதல் 7மணி வரை நடைபெறுகிறது.  இக்கண்காட்சியினை பொறி யாளர்கள், கட்டிட நிறுவனங்கள் நடத்துபவர்கள், கட்டுமான பொருள்கள் விற்பனையாளர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் என அனைவரும் கண்டு பயன்பெற வேண்டுமென கட்டடப் பொறி யாளர்கள் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.சிவன்பாலசுப்பிரமணியம், செயலாளர் சௌ.ஸ்டாலின்பாரதி, பொருளாளர் ஜி.ஜார்ஜ் லியோ ஆனந்த், கண்காட்சித் தலைவர் கே. ரமேஷ் (எ) அருண், கண்காட்சி செய லாளர் எம்.துரைசாமி, கண்காட்சிப் பொருளாளர் கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.