கோவை, ஜூலை 24- கோவை மாநகர காவல் எல்லைக்குட் பட்ட போத்தனூர் காவல் எல்லையில் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டதற்கான துவக்க விழாவை மாநகர காவல் ஆணையாளர் புதனன்று தொடங்கி வைத்தார். கோவை மாநகரில் கண்காணிப்பு கேம ராக்கள் அமைக்கும் பணியை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து செயல் படுத்தி வருகின்றனர். முதற்கட்டமாக, ஆர்.எஸ்.புரத்தில் தொடங்கி பீளமேடு காவல் எல்லை, சாய்பாபா கோவில் காவல் எல்லை, காட்டூர் காவல் எல்லை ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட் டுள்ளன. இதன் அடுத்தகட்டமாக போத்த னூர் காவல்நிலைய எல்லைக்கு உட் பட்ட பகுதிகளில் 120 கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் செயல்பாடுகளை துவக்கி வைக் கும் விழா மற்றும் புனரமைக்கப்பட்ட புறக்காவல் நிலையம் திறப்பு விழா புத னன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண், மாநகர காவல் துணை ஆணையர்கள் பாலாஜி சரவணன், பெருமாள், உதவி ஆணையாளர் செட்ரிக் மனுவேல், நுண்ண றிவு பிரிவு உதவி ஆணையாளர் வெற்றி செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.