tamilnadu

img

ஈரானில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்... ஒரே நாளில் 9 பேர் பலி  

டெஹ்ரான் 
         சீனாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நாடுகளில் ஈரான், தென்கொரியா முதலிடத்தில் உள்ளது. தென்கொரியாவிலும் அதிக பாதிப்பு ஏற்பாட்டாலும் பலி எண்ணிக்கை குறைவு தான். 

ஆனால் ஈரானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவு தான் என்றாலும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி 19-ஆம் தேதி ஈரானில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது. அடுத்த ஒரே வாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி ஈரான் மக்களைக் கதிகலங்க வைத்துள்ளது. ஈரான் துணை அதிபர் மசூமே எப்டகர் (பெண்), சுகாதாரத்துறை துணை அமைச்சரான இராஜ் ஹரிர்ஜி மற்றும் ஒரு எம்.பிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 9 பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி ஈரானில் கொரோனா வைரஸால்  பலியானோர்களின் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.
 

;