tamilnadu

img

கேரள அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் யுடிஎப் தகர வழிவகுத்துள்ளது: ஏ.விஜயராகவன்

திருவனந்தபுரம், ஆக.27- எல்டிஎப்புக்கும் முதல்வருக்கும் எதிராக யுடிஎப்பும்- பாஜகவும் நடத்தி யது வெற்று பிரச்சாரம் என்பதை நம்பிக்கையில்லா தீர்மானம் வெளிப் படுத்தியது. முன்னணி என்கிற வகையி லும் அரசியலாகவும் யுடிஎப் சிதல மடையும் காட்சியையும் சட்டமன்றத்தில் பார்க்க முடிந்ததாக எல்டிஎப் ஒருங்கி ணைப்பாளர் ஏ.விஜயராகவன் செய்தியா ளர்களிடம் கூறினார். ஒருநாள் முழுவதும் நீடித்த விவா தத்தில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பேசவேயில்லை. குற்றச்சாட்டு களில் உண்மை இல்லை என்பதும், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளதையும் இது தெளிவுபடுத்துகிறது என்றார். தொலைக்காட்சி சானலில் நான்கு பேர் சேர்ந்து நடத்துவது போன்ற தல்ல சட்டமன்ற விவாதம். அவையில் எதிர்க்கட்சி தோல்வி அடைந்த நிலை யில், அதற்கு அடுத்த நாள் கேபிசிசி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அதே பிரச்சனைகளை எழுப்பி தெருவில் போராட்டத்தில் இறங்கும் பரிதாபகரமான காட்சியை காண முடிந்தது. தீவிர வகுப்புவாத ஜமாத்-இ-இஸ்லாமி, எஸ்.டி.பி.ஐ அமைப்புக ளுடனான கூட்டணி குறித்த எல்.டி.எப் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது முஸ்லிம் லீக்கோ பதிலளிக்க முடிய வில்லை.  வகுப்புவாதத்துடன் சமரசம் செய்வதோடு, அவை அரசியல் ரீதியாக வும் யுடிஎப் சரிந்து வருகிறது. 1982 முதல் யுடிஎப் உடன் உறுதியாக இருந்த கேரள காங்கிரஸ் (எம்), இன்று அந்த கூட்டணி யில் இல்லை என்பது நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் விலகி நின்றதி லிருந்து தெளிவாகிறது என்றார்.   எல்டிஎப் அரசின் சாதனைமிக்க செயல்பாடுகளை விமர்சிக்க எதிர்க்கட்சி யால் முடியவில்லை. இடதுசாரிகளின் நிலைப்பாடு தெளிவாக இருந்தது. ஒக்கி யும், நிப்பயும், பிரளயமும், கோவிட்டும் வந்தன. அவற்றில் இருந்தெல்லாம் மக்களுடன் இணைந்து மீண்டு வர பினராயி விஜயன் தலைமையிலான இந்த அரசால் முடிந்தது.  காங்கிரசின் வீழ்ச்சி கொள்கை ரீதியான சூழ்நிலைகளால் உருவானது. மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்த காங்கி ரசால் முடியவில்லை. அதை காங்கிரசில் உள்ள சில தலைவர்களே கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். அதுதான் அண்மை யில் சோனியா காந்திக்கு எதிராக சில காங்கிரஸ் தலைவர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் என்றும் விஜயராகவன் கூறினார்.