கோட்டயம், ஜூலை 13- ரப்பர் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவர உள்ள திருத்தம் கட்டுப்பாடற்ற இறக்குமதியை அதிகரிக்கும் நோக்கம் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இறக்குமதியை கட்டுப்படுத்த ரப்பர் போர்டுக்கு உள்ள அதிகாரத்தை நீக்கி முழுமையாக தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவே மத்திய அரசு புதிய திருத்தம் கொண்டுவர உள்ளது. சந்தையில் ரப்பரின் தேவையை புரிந்துகொண்டு ரப்பர் போர்டு பரிந்துரை செய்வதற்கு ஏற்ப இறக்குமதி செய்வது இதுவரையிலான வழக்கம். இதில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. செஸ் நடைமுறையில் இருந்தபோது ரப்பர் உற்பத்தி மற்றும் சந்தையின் தேவை குறித்த துல்லியமான கணக்கு போர்டுக்கு கிடைத்து வந்தது. அதன் அடிப்படையில் இற்குமதிக்கான பரிந்துரையை வழங்கி வந்தது. செஸ் இல்லாமல் போனதுடன் போர்டிடம் துல்லியமான விவரங்கள் கிடைக்கவில்லை என்கிற காரணத்தை முன்வைத்து இந்த அதிகாரம் நீக்கப்பட உள்ளது.
மக்கள் பிரதிநிதிகளும் விவசாயிகளின் பிரதிநிதிகளும் கொண்ட ரப்பர் போர்டை வலுவிழக்கச் செய்வது பெரும் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக என்கிற குற்றச்சாட்டு வலுவானது. இறக்குமதி அதிகரித்தால் இந்திய சந்தையில் ரப்பர் விலை குறையும். இது பெரும் நிறுவனங்களுக்கு லாபமாகும். இப்போதே தகர்ந்திருக்கும் ரப்பர் துறைக்கு இது மேலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். விவசாயிகளுக்கு மிக குறைவான லாபமே தற்போது கிடைக் கிறது. மாநில அரசின் மானியம் உட்பட கிலோவுக்கு ரூ.150 கிடைத்து வருகிறது. கோவிட் வெளிநாடுகளில் ரப்பர் துறையை பாதிக்காததால் குறிப்பி டத்தக்க அளவில் இறக்குமதிகள் குறையவில்லை. கோவிட்டின் சூழலில், வெளிநாடுகளில் ரப்பர் கையுறை களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் இந்தியாவிலிருந்து கையுறை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதனால்தான் சமீபத்திய ஆண்டுகளில் ரப்பர் கையுறை விலைகள் உயர்ந்துள்ளன. இருப்பினும், விவசாயியை நெருக்கடியிலிருந்து மீட்க மத்திய அரசிடமிருந்து நடவடிக்கை இல்லை. மாறாக விலை வீழ்ச்சிக்கு வழி வகுத்து வருகிறது. இது கேரளம், தமிழ கத்தில் குமரி மாவட்டம் உள்ளிட்ட ரப்பர் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும்.