tamilnadu

வெளிநாடுகளிலிருந்து வருவோரின் தனிமைக் காலம் இரண்டு வாரங்களாக்க கோரிய மனு நிராகரிப்பு

கொச்சி, மே 9- வெளிநாடுகளிலிருந்து வீட்டிற்கு வருவதற்கு முன்னர் இரண்டு வார தனிமைப்படுத்தல் கோரிக்கையில் தலையிட உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மாநில அரசு மத்திய அரசின்  வழிகாட்டுதல்களை மீறி தலையிடு வதாக துபாய் கே.எம்.சி.சி உள்ளிட்ட மனுதாரர்களின் கோரிக்கையை நீதி மன்றம் நிராகரித்தது. வெளிநாட்டில் உள்ளவர்களை திருப்பி அழைத்துவர வேண்டும் என்கிற மனுவின் மீதான விவா தத்தில் இரண்டு வார நிறுவன தனி மைப்படுத்தலை மத்திய அரசு கட்டா யப்படுத்தியிருந்தாலும், ஏழு நாட்கள்  மட்டுமே மாநில அரசு பரிந்துரைத்து வருவதாக மனுதாரர்கள் புகார் கூறினர். கூடுதல் அட்வகேட் ஜென ரல் ரஞ்சித் தம்பன் கூறுகையில், வெளி நாடுவாழ் கேரள மக்களுக்கு அர சாங்கம் வழங்கிய வசதிகளை மத்திய  அரசு பாராட்டியுள்ளது. கோவிட் நோய் இல்லாதவர்கள் மட்டுமே கொண்டு வரப்படுகிறார்கள். மத்திய அரசின் வழிகாட்டுதலில் வெளி நாடுகளில் கோவிட் பரிசோதனை பரிந்துரைக்கப்படவில்லை.

இந்தச் சூழலில்தான் ஏழு நாள் நிறுவன தனி மைப்படுத்தலை கேரளா முன்மொ ழிந்துள்ளது. கர்ப்பிணிகள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 75 வய துக்கு மேற்பட்டவர்களை தனிமைப்ப டுத்துவதில் நடைமுறை சிரமம் உள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களில் தெளிவு கோரப்பட்டுள்ளது. இதில் திருத்தங்கள் மத்திய அரசால்  வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது. மாநில அரசின் நடவடிக்கை க்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. மத்திய அரசின் வழிகாட்டு தலை பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது என்று கேரள அரசு தரப்பில்  சுட்டிக்காட்டப்பட்டது. கேரளத்தின் தேவைகளை மத்திய சுகாதார மற்றும்  குடும்ப நல அமைச்சக  நிபுணர் குழு பரிசீலித்து வருவதாக மத்திய அரசு  தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனிமைப்படுத்தல் குறித்து அர சாங்கம் முடிவு செய்ய வேண்டும் இந்த நடவடிக்கை நிர்வாக பிரிவின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்று நீதிமன்றம் கூறியது.

வெளி நாடுகளில் வாழ்வோர் நலன் குறித்து அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். மனுதாரர்கள் அதிக அக்கறை செலுத்த தேவையில்லை. அரசின் நடவடிக்கையை பாருங்கள். அர சாங்கம் எடுக்கும் ஒவ்வொரு அடியி லும் தலையிட முடியாது என்றும் நீதி மன்றம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து இந்த மனுக்கள் மீதான விசாரணை மே 12  ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.