திருவனந்தபுரம், ஜுலை 18- கேரளத்தில் வெள்ளி யன்று ஒரே நாளில் 791 கோவிட் நோயாளிகள் கண்டறியப்பட்டனர். இதில் தொடர்பு மூலம் 532 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. திருவனந்த புரத்தில் மிகவும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது என முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரத்தில் வெள்ளியன்று கோவிட் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: கடற் கரை பகுதிகளில் அதிவிரை வாக நோய் பரவல் நடக்கி றது. பூந்துறையிலும் புல்லு விளையிலும் சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளது. தொடர்பு மூலம்நோய் தொற்று எற்பட்ட வர்களில் 42 பேருக்கு நோய் தொற்றிடம் தெரியாது. வெள்ளியன்று நோய் கண்டறியப்பட்டதில் 135 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 98 பேர் மற்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். சுகாதார ஊழி யர்கள்-15, தலா ஒரு பிஎஸ்எப், ஐடிபிபி வீரர்களுக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. திரிச்சூர் மாவட்டம் புல்லூர் ஷைஜு உயிரிழந்தார். வெள்ளியன்று 133 பேர் குணமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 14602 மாதிரிகள் பரிசோ தனை செய்யப்பட்டன. இது வரை 2,75,900 பேரது மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டன. 7610 மாதிரிகளின் முடிவுகள் நிலுவையில் உள்ளன. முன்னுரிமை பிரிவினரின் 88903 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில் 84454 மாதிரிகளில் நோய் தொற்று இல்லை என உறு தியானது. மாநிலம் முழுவ தும் 285 ஹாட்ஸ்பாட்டுகள் உள்ளதாக முதல்வர் தெரி வித்தார்.