tamilnadu

கேரளத்தில் மே 26 முதல் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்

திருவனந்தபுரம், மே 20- ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படியே கேரள மாநிலத்தில் மே 26 முதல் எஸ்எஸ்எல்சி, பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் நடைபெ றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மே 26 முதல் நடப்பதாக அறி விக்கப்பட்டிருந்த எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 பொ துத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மத்திய  அரசின் வழிகாட்டுதல்கள் வந்தபிறகு, தேர்வு  தேதிகளை அறிவிப்பது என்று புத னன்று நடந்த கேரள அமைச்ச ரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நான்காம் கட்ட  ஊரடங்கு முடியும் வரை (மே31) தேர்வு கள் நடைபெறாது என்றும் ஜூன் முதல் வார த்தில் தேர்வுகள் நடைபெறும் என்றும் கூறப்ப ட்டது. ஆயினும், மத்திய அரசின் வழிகாட்டு தல்கள் புதனன்று அறிவிக்கப்பட்டதை யடுத்து, தற்போது ஏற்கனவே அறிவிக்கப்ப ட்டிருந்த படியே மே 26 முதல் எஸ்எஸ்எல்சி, பிளஸ் - 2 பொதுத்தேர்வு கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

;