கொச்சி, மே 9- கேரளத்தில் தனியார் மருத்துவமனைகள் செவிலியர்களது சம்பளத்தை நிறுத்தவோ குறைக்கவோ கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. செவிலியர்களின் சம்பளம் குறைக்க கூடாது என்கிற பொதுநல வழக்கை கேரள உயர்நீதிமன்றத்தில் திரிச்சூரைச் சேர்ந்த பிரகாஷ் ஜாண் தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது அரசின் நிலைபாடாக, செவிலியர்களது சம்பளத்தை நிறுத்தவோ குறைக்கவோ கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. ஊரடங்கை முன்னிறுத்தி தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வேலை நீக்கமோ சம்பள குறைப்போ செய்யய் கூடாது என்பது மத்திய அரசின் உத்தரவு. அதன்படி செவிலியர் போன்றோரை வேலை நீக்கம் செய்யவோ அவர்களுக்கான சம்பள குறைப்போ கூடாது என்று தொழிலாளர் ஆணையர் உத்தரவிட்டுள்ளார் என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.