tamilnadu

img

மங்களூரில் ஊடகத்தினர் மீதான தாக்குதல்: கேரளத்தில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவனந்தபுரம்:
பாஜக அரசின் ஊடகத்தினர் மீதான தாக்குதலுக்கும் நாட்டை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எதிராக கேரளம் முழுவதும் செய்தியாளர்களின் போராட்டம் வெடித்தது.திருவனந்தபுரம், கோட்டயம், தொடுபுழா உட்பட மாநிலம் முழுவதும் சனியன்றுஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர். திருவனந்தபுரம் ஜிபிஓ அலுவலகத்திற்கு பேரணியாக சென்ற செய்தியாளர்களும் ஊடக ஊழியர்களும் கருஞ்சட்டத்தை தீவைத்து கொளுத்தினர். பெண்ஊடகத்தினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். கேரள பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுபாஷ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.சுரேஷ் வெள்ளிமங்கலம் தலைமை வகித்தார்.தலைவர் கே.பி.ரெஜி, மீடியாக அகாடமி தலைவர் ஆர்.எஸ்.பாபு உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக திருவனந்தபுரம் ரத்தசாட்சி மண்டபத்தில் விடுதலைப் போராட்டதியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

;