tamilnadu

img

பெருந்தல்மன்னாவில் 400 ‘லைப்’ வீடுகள் செப்டம்பர் முதல் ஒப்படைக்க ஏற்பாடு

மலப்புரம், ஆக.23- கோவிட் தடைகளை மீறி 400 குடும்பங் களுக்கு ‘வீடு’ என்கிற கனவுக்கு பெருந் தல்மன்னா நகராட்சி உயிர் கொடுத்துள் ளது. எரவிமங்கலம் ஒடியன் சோலயில் 6.93 ஏக்கரில் லைப் மிஷன் வீட்டு வளா கத்தின் கட்டுமான பணிகள் நடந்து வரு கின்றன. நிலம் இல்லாதவர்களுக்கு, நக ராட்சி விலைக்கு வாங்கிய இடத்தில் மூன்று தளங்களில் தலா 12 வீடுகளைக் கொண்ட 30 கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. செப்டம்பர் முதல் வாரத்திற்குள் 20 குடி யிருப்புகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப் படும். மீதமுள்ள குடியிருப்புகள் அக்டோ பரில் ஒப்படைக்கப்படும் என்று நகராட்சித் தலைவர் எம்.முகமது சலீம் தெரிவித்தார். இந்த குடியிருப்புகளுக்காக ஒரு குடிநீர் திட்டம், ஒரு சமுதாயக் கூடம், அங்கன்வாடி கள், விளையாட்டுத் திடல், ஓய்வு இல்லம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் உள்ளது. கட்டுமானத்தில் பங்காளிகளான பய னாளிகள் வீட்டு வசதிகளுடன் வேலை வாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி பெறுவ தற்கான மாநில அரசின் முன்னோடி திட்ட மாகும் இது. குடும்பஸ்ரீ மற்றும் பயனாளி கள் அடங்கிய குழு வீட்டு வளாகத்தை நிர்மாணிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.

மலாகா சொல்யூ ஷன்ஸ் குடும்பஸ்ரீ தொழில்முனைவோர் குழு கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரு கிறது. நகராட்சி நிர்வாகம் மேற்பார்வைக் கான பொறுப்பு ஏற்றுள்ளது.  குடியேறுவதற்கு முன்பே பயனாளிகள் தங்களது பக்கத்து வீட்டினரை அறிமுகம் செய்து கொள்ள பல முறை கூடினர். குடும்ப ஸ்ரீ பிரிவும் அடுக்குமாடி கட்டட அளவிலான குழுக்களும் அமைக்கப்பட்டன. கட்டி டத்தின் கட்டுமானத்தை கண்காணிக்க கட்டட குழுக்களும் வருகை தருகின்றன. கட்டுமான செலவு ரூ.54 கோடி என மதிப்பி டப்பட்டாலும், ரூ.42 கோடி செலவில் இந்த திட்டம் முடிவடையும் என்று நகராட்சி அதி காரிகள் எதிர்பார்க்கின்றனர்.  ஒப்பந்ததாரரின் லாபத்தை தவிர்த்தும், வரிச்சலுகைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் செலவுகள் குறைக்கப்பட்டன. அர சாங்கம் ரூ.28 கோடியும், நகராட்சி ரூ.10 கோடியும் வழங்கியது. பயனாளிகளின் பங்க ளிப்பு உட்பட ரூ.4 கோடி பொதுமக்களிடம் திரட்டப்பட்டது.