இந்திய வரலாற்றில் முதல்முறையாக வழக்கு விசாரணையை யூடியூப் பக்கத்தில் குஜராத் உயர்நீதிமன்றம் நேரலை செய்துள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணத்தினால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நீதிமன்றங்கள் காணொலி மூலமாக வழக்குகளை விசாரணை செய்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய வரலாற்றில் முதல்முறையாக குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் அமர்வு இன்று வழக்கு விசாரணையை யூடியூப் பக்கத்தில் நேரலை செய்துள்ளது.
வழக்கு விசாரணை https://www.youtube.com/watch?v=WpqQWBERB_Y என்ற யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது.