tamilnadu

img

கிருஷ்ணகிரியில் மூத்த செய்தியாளர்களுக்கு நினைவேந்தல்

கிருஷ்ணகிரி,டிச.31- சாக்ஷி தெலுங்கு நாளித ழின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைமை செய்தியாளராக 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவர், ஓசூர் மீடியா கிளப்ன் தலைவராகவும், கவுரவ தலைவராகவும் பணியாற்றி வந்தவர் சத்திய நாராயண ரெட்டி.  உடல் நலக்  குறைவால் மரணமடைந்தார்.  தினத்தூது, தினச்சுடர்,  நாளிதழ்களில் செய்தியாள ராகவும், நிருபர்கள் சங்கத்  தில் தொடர்ந்து நிர்வாகியாக வும் செயல்பட்டு வந்த ஏ பி. சுரேஷ் அண்மையில் கால மானார். இந்த இருவரின் நினை வேந்தல் நிகழ்ச்சி ஆந்திர சமிதியில் நடைபெற்றது. தெலுங்கு மொழி அமைப்  பின் தலைவர் ராதாகிருஷ் ணன் ராஜூ மற்றும் ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ. மனோகரன், சத்ய நாராயண ரெட்டி குடும்பத்தினர், ஓசூர் நிருபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

;