tamilnadu

ஆர்ப்பாட்டம்

பணிநீக்கம், பணியிடமாறுதல் உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில்  விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

                                         **************

தெலுங்கானா மாநிலத்தில் போராடும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழகத்தில் பேட்டரி பேருந்துகளை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்தும்  அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் கடலூர் பணிமனைமுன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.