கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் சாலை தின்னூர் அருகில் உள்ள வாசவி நகரில் கழிவு நீர் கால்வாய்கள், தார்ச் சாலை அமைக்க வேண்டும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர், தெரு விளக்கு வசதி செய்து தர வலியுறுத்தி மாநகர ஆணையரிடம் பகுதி மக்கள் புகார் மனு கொடுக்கச் சென்றனர். ஆணையர் இல்லாத நிலையில் பொறியாளரிடம் மனு கொடுத்தனர். இதில் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் சிபி.ஜெயராமன், செயலாளர் ஆனந்த குமார், திலகவதி, மூர்த்தி, சரவணன், ஜோசப் அருள்ராஜ், சாம்பசிவம், சௌந்தரராஜன், கங்கன், ஜோதி, வெங்கடேசன், சுகுமார், ரமேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.