ஓசூர் அருகே இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள கொடரை மலைக்கிராமத்தில் தாய் நாகம்மா, அவரது மகன் பிரேம்குமார் (3), மகள் பிரியம்மா (7) கிணற்றில் வீசி விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறில் நாகம்மா தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்