கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் நிலத்தில் அனுமதியின்றி மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இந்திய தந்தி சட்ட நகல் எரிக்கும் போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநிலப் பொருளாளர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பிரகாஷ், துணைத் தலைவர் சின்னசாமி மாவட்டக் குழு உறுப்பினர்கள் அனுமப்பா, சீனிவாசலு, பால் சங்க மாவட்ட செயலாளர் அண்ணாமலை, விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி வெங்கடாசலம் உள்ளிட்ட ஏராளமானோரை காவல் துறையினர் கைது செய்தனர்.