tamilnadu

img

வரதட்சணை கொடுமை: விஷம் கொடுத்து இளம் பெண் கொலை

கிருஷ்ணகிரி, ஜூலை 19- கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ் சிறு பாக்கத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் ராஜேஸ்வரி (17), கடப்பாவை சேர்ந்த  வசந்தா மகன் கணேஷ் (21). இருவரும் ஒன்றரை ஆண்டுக்கு முன் காதலித்து இரு வீட்டாரின் சம்மதமில்லாமல் திருமணம் செய்து கொண்டனர். ஓசூர் வட்டம் சானசந்தி ரம் பாறை குட்டை பகுதியில் அரசு இருளர்க ளுக்கு கட்டிக் கொடுத்த கடவுள் நகரில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு பெளர்னிகா  என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணேஷ் கிடைக்கும் கூலி வேலைகளுக்கு செல்வது குடிப்பது, சில பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துக் கொள்வது என இருந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரியின் பெற்றோர் இரு சக்கர வாகனம், 50 ஆயிரம் ரூபாய், இரண்டரை சவரன் நகை கொடுத்துள்ளனர். கணேசும், அவரது தாய் வசந்தாவும் ராஜேஸ்வரியிடம் வரதட்சணையாக இன்னும் 50 ஆயிரம் வாங்கி வா என அடிக்கடி  அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ள னர். பெண் குழந்தை வேண்டாம் என கண வரும், மாமியாரும் சேர்ந்து ஒரு முறை பாறை  குட்டையிலும், சமீபத்தில் முள் புதரிலும் வீசி  எரிந்துள்ளனர்.

அருகிலிருந்தவர்கள் குழந்தையை மீட்டு ராஜேஸ்வவரியிடம் கொடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 15ஆம் தேதி  விஷம் குடித்த நிலையில் ராஜேஸ்வரி வீட்டுக்கு வெளியில் வந்து என்னை காப்பாற்  றுங்கள் என அலறியுள்ளார். யாரும் வரா தீர்கள் அவள் சாகட்டும் என கணேசும் அவர்  அம்மா வசந்தாவும் தெருவில் உள்ளவர்க ளிடம் கூறியுள்ளனர். அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்ற சிறிது நேரத்தில் ராஜேஸ்வரி இறந்துள்ளார். தகவல் அறிந்து வந்த ராஜேஸ்வரி அப்பா கண்ணன் ஓசூர்  காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார்.  ஆனால் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையில் விஷம் குடித்து இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால் ராஜேஸ் வரி உடலை வாங்க மறுத்தனர். மேலும் இது குறித்து மாதர் மற்றும் வாலிபர் சங்க  நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். அதனடிப் படையில் மாதர் சங்க மாவட்டச் செய லாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, வாலிபர் சங்க  மாவட்டத் தலைவர் ஸ்ரீதர், வட்டத் தலைவர் விக்னேஷ் கடவுள் நகர் சென்று சம்பவம் குறித்து விசாரித்தனர்.

பிறகு சம்பவத்தை விளக்கி இது தற் கொலையல்ல, கொலை என்று மாற்றி வழக்குப் பதிவு செய்ய வேண்டும், அதன டிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ராஜேஸ்வரி குடும்பத்திற்கும், குழந்தைக்கும்  நீதியும், நிவாரணமும் வழங்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட வருவாய்  அலுவலர் கணேஷ், வசந்தா இருவரும் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாகவும், உரிய முறையில் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பபடும் எனவும் தெரி வித்துள்ளார்.