tamilnadu

img

சாதியப் படுகொலை: நீதி கேட்டு போராட்டம்

கிருஷ்ணகிரி, செப். 30- கிருஷ்ணகிரி மாவட்டம் காமன்  தொட்டி எல்லாம்மா கோவிலை 48 வய தான ராஜாப்பா 25 ஆண்டுகளுக்கும் மேலாக பூசாரியாக இருந்து நிர்வ கித்து வந்தார். ராஜப்பா தலித் என்ப தால் பல ஆண்டுகளாக ஆதிக்க சாதி யினர் சிலர் அடிக்கடி தகராறுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த ஆண்டு சாலை போடுவ தாக கூறி ஊர் தலைவர் மற்றும் ஆதிக்க சாதியினர் சிலரும் அரசு  அதிகாரிகளும் வேண்டும் என்றே  கோவில் சுற்றுச் சுவரை இடித்து பீடம்  வரை சாலை அமைத்தனர். அதற்கு  எதிர்ப்பு தெரிவித்ததுடன் இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் ராஜப்பா பல முறை புகார் மனு கொடுத்துள்ளார். அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் வழக்கும் போட்டுள்ளார். பல நேரங்களில் இதற்காக ராஜப்பா மிரட்டலுக்கும் ஆளாகியுள்ளார். இந்நிலையில், கடந்த 11.7.2019 ல்  ராஜப்பா காணவில்லை என சூளகிரி  காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். பிறகு, 13 ஆம் தேதி காட்டுப் பகுதியில் ராஜப்பாவின் உடல் கண்டுடெடுக்கப்பட்டது. ராஜப்பாவை கொலை செய்த குற்ற வாளிகளை கண்டுப்பிடித்து நடவ டிக்கை அதிகாரிகளுக்கு புகார் மனு  கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை மற்றும் மாவட்ட அதி காரிகளை கண்டித்தும் சூளகிரி ரவுண்டானா முன்பு தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் நாகேஷ்பாபு முன்னிலை வகித்தார்.  மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந் தன் விளக்க உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா ளர் எஸ்.ஆர். ஜெயராமன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இருதய ராஜ், சாம்ராஜ், சுரேஷ், கோவிந்த சாமி, வட்டச் செயலாளர்கள் நாக ராஜ், மூர்த்தி, வெங்கடேஷ் மாவட்டக்  குழு உறுப்பினர் சேதுமாதவன், துணை செயலாளர் முனிராஜ் நிர்வாகி  கணேசன், சிஐடியு செயலாளர் ஸ்ரீதர்,  விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளார் பிரகாஷ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன் உரையாற்றினர். சாதி ஆனவப்படுகொலை செய்யப்பட்ட காமன் தொட்டி ராஜப்பா குடும்பத்துக்கு நீதி கிடைக்க  சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், சாண மாவு கிராமத்தில் வசிக்கும் 41 தலித் குடும்பங்களின்  நிலத்தை மீட்டு அதில் குடியமர்த்த வேண்டும், ராமச்சந்திரம் கிராம ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், ஊராட்சி ஆழ்துளை கிணறுகளை மீட்டு கிராம மக்களுக்கு குடிநீர் வசதி  செய்து தர வேண்டும், குண்டும் குழியு மான சாலையை சீரமைக்க வேண்டும்  என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தினர்.