மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பேரவை கூட்டத்தில் தீக்கதிர் ஆண்டு சந்தாக்கள் 22க்கான தொகை மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ். கண்ணன், ஜி.ஆனந்தன் ஆகியோரிடம் வழங்கினர். மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட குழு உறுப்பினர்கள், வட்டச் செயலாளர்கள், வட்ட குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.