tamilnadu

img

அக்சயா ஊழியர்களுக்கு கையடக்க கணினி இடுக்கியில் அமைச்சர் எம்.எம்.மணி வழங்கினார்

இடுக்கி, ஜுன் 16- தகவல் தொழில்நுட்பத் தின் பயன்கள் பொதுமக் களை சென்றடையும் நோக் கத்துடன் துவக்கப்பட்ட அக் சயா திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கையடக்க கணினிகளை (டேப்லெட்) கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி வழங்கினார். மாவட்ட அளவில் டேப் லெட் வழங்கும் நிகழ்ச்சி இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எச்.தினே சன் தலைமை வகித்தார். அமைச்சர் எம்.எம்.மணி டேப் லெட்டுகளை வழங்கினார். அக்சயா மூலம் செயல் படுத்தப்படும் சேவைகள் விலை மதிப்பற்றது எனவும் அரசின் சேவைகளை மக்க ளிடம் கொண்டு செல்வது என்பதே திட்டத்தின் நோக் கம் என அப்போது அமைச்சர் குறிப்பிட்டார். 17 ஆண்டு களாக குறிப்பிட்ட சேவை களை மக்களுக்கு வழங்கும் பொறுப்பை அக்சயா மையங்கள் மேற்கொண்டு வருகின்றன.  2002ல் மலப்புரத்தில் தொடங்கப்பட்ட அக்சயா திட்டம், அறிவியல் தொடர்பு மையமாகவும் மக்களுக்கு சேவை வழங்கும் மையமாக வும் செயல்பட்டு வருகிறது. அரசின் சேவைகளும் அமைப்புகளும் விரைவாக மக்களிடம் கொண்டு செல் லப்படுகின்றன. ஆதார் பெயர் சேர்த்தல், புதுப்பித் தல், மருத்துவமனைகளுக்கு சென்று பிறந்த குழந்தை களுக்கு ஆதார் அட்டைகள் வழங்குவது, டிஜிட்டல் முறை கல்வி குறித்து விளம்பரம் செய்தல், ஓய்வூதியர்க ளுக்கான ஜீவன் பிரமாண் ஆயுள் சான்று போன்ற வற்றை பொதுமக்களுக்கு அளிப்பதற்காகவே கேரள அரசு அக்சயா ஊழியர் களுக்கு (சுயதொழில்) இல வசமாக டேப்லெட்டுகள் வழங்கியுள்ளது.  பிஜு சி.மாத்யூ தொழில் பட்ப ஆலோசனைகளை ஊழியர்களுக்கு வழங்கி னார். மாவட்ட திட்ட அலு வலர் கே.கே.ஷீலா, தகவல் தொடர்பு அலுவலர் என். சதீஷ் குமார், அக்சயா மாவ ட்ட திட்ட ஒருங்கிணைப்பா ளர் சி.எம்.ஷம்நாத் உள் ளிட்டேர் பேசினர்.