tamilnadu

img

கனடா டி-20 தொடரில் யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் ஜூன் 10-ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். சர்வதேச தொடரில் மட்டும் ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங், ஐபிஎல் போன்ற உள்ளூர் டி-20 தொடரில் விளையாடுவது தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.  இந்நிலையில் கனடா நாட்டின் உள்ளூர் டி-20 தொடரான குளோபல் தொடரின் 2-வது சீசன் வெள்ளியன்று (கனடா நேரப்படி - வியாழன்) தொடங்கியது. இந்த தொடரில் யுவராஜ் சிங் சத்தமில்லாமல் கலந்துகொண்டுள்ளார்.  தொடக்க ஆட்டத்தில் டொரான்டோ நேஷனல்ஸ் - வான்கூவர் நைட்ஸ் அணிகள் மோதின. டொரான்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங்கும், வான்கூவர் நைட்ஸ் அணியின் கேப்டனாக விண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லும் களமிறங்கினர். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் வான்கூவர் நைட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  யுவராஜ் சிங் ஓய்வுக்குப் பின்பு கிரிக்கெட் பக்கம் காலடி வைக்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கனடா டி-20 தொடரில் திடீரென கேப்டனாக களமிறங்கியதால் அவரது ரசிகர்கள் மீம்ஸ் மூலம் கொண்டாடிவருகின்றனர். 

;