tamilnadu

img

மனைவிகளை அழைத்து வரக்கூடாது

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் 30-ஆம் தேதி தொடங்குகிறது.இந்த தொடரில் களமிறங்கும் பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு கிரிக்கெட்வாரியம் (பிசிபி) புது உத்தரவுபிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில், “உலகக்கோப்பைச் சுற்றுப்பயணங்களில் வீரர்களுடன் இணைந்து மனைவிகளும், குடும்ப உறுப்பினர்களும் வரக்கூடாது. அப்படியே வந்தாலும் அவர்களுடைய சொந்தச் செலவில் தான் தங்க வேண்டும். வீரர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்லக் கூடாது.குறிப்பாக நட்சத்திர விடுதியில் வீரர்களுடன் தங்கக் கூடாது” என்று கட்டளையிடப்பட்டுள்ளது. எனினும் பாகிஸ்தான் வீரர்களில் ஹாரிஸ் சோஹைலுக்கு மட்டும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.