tamilnadu

img

முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி

சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்திய-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின் தொடக்கத்தில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணியின் ரிஷப் பந்த் 71 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 70 ரன்களும், கேதர் ஜாதவ் ரன்களும் இந்திய அணிக்கு சேர்த்தனர்.  50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது. 

பின்னர், 288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 47.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில், ஷாய் ஹோப் 102 ரன்னுடனும், பூரன் 29 ரன்னுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.