tamilnadu

img

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தானா இந்தாண்டின் சிறந்த பெண் கிரிக்கெட் வீரராக தேர்வு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டிங் வீராங்கனை ஸ்மிருதி மந்தானா இந்தாண்டின் சிறந்த பெண் கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி பேட்டிங் செய்து வருபவர் ஸ்மிருதி மந்தானா. தன்னுடைய அபார ஆட்டத்தால் கடந்த 2018ல் 12 ஒருநாள் போட்டிகளில் சுமார் 66.9 சராசரியில் 669 ரன்களை குவித்துள்ளார். அதேசமயத்தில் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 25 போட்டிகளில் விளையாடி 622 ரன்களை குவித்திருந்தார். இந்நிலையில் விஸ்டம் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் என்ற நிறுவனம் 2018 ஆம் ஆண்டின் முன்னணி கிரிக்கெட் வீரர் என்ற பட்டத்தை ஸ்மிருதி மந்தானாவுக்கு அளித்திருந்தது. ஏற்கனவே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தாண்டின் சிறந்த பெண் கிரிக்கெட் வீரராக ஸ்மிருதி மந்தானாவை தேர்வு செய்திருந்தது.


தற்போது 2019 ஆம் ஆண்டிற்காக CEAT நிறுவனம் அளிக்கும் சர்வதேச கிரிக்கெட் விருதுகளில் ஸ்மிருதி மந்தானா இந்தாண்டின் சர்வதேச சிறந்த பெண் கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.