ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்ச கத்தால் “ஸ்கௌட் மாஸ்டர்ஸ்” என்ற பெயரில் சர்வதேச ராணுவ விளையாட்டுப் போட்டிகள் 2015-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 2018-ஆம் ஆண்டுக்கான ஸ்கௌட் மாஸ்டர்ஸ் போட்டிகளை இந்தியா நடத்துவதற்கான வாய்ப்பை ரஷ்ய அரசு அளித்தது. பாதுகாப்பு பிரச்சனையால் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடு களைத் துரிதமாக முடிக்க இயலவில்லை என இந்திய அரசு கைவிரிக்க, 2019-ஆம் ஆண்டிற்குள் தொடரை நடத்தி முடிக்க ரஷ்ய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், வரும் 6-ஆம் தேதி (ஆகஸ்ட்) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ஸ்கௌட் மாஸ்டர்ஸ் போட்டி கள் தொடங்குகின்றன. 14-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் சீனா, ரஷ்யா, அர்மேனியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ் தான் உள்ளிட்ட 7 நாடுகளின் ராணுவ குழுக்கள் (இந்திய ராணுவ குழுவிற்கு அனுமதி கிடையாது) கலந்து கொள்கின்றன. சமீப காலமாகக் காஷ்மீரின் டோக்லாம் எல்லையில் இந்தியா - சீனா இடையேயான மோதல் போக்கால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஸ்கௌட் மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டியில் சீனா கலந்து கொள்வதன் மூலம் இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.