tamilnadu

img

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அபாயகரமானவர்கள்

உலகக்கோப்பை தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும்,  ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கிரிக்கெட் உலகமே இந்த போட்டியை அதிகம் எதிர் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில்,   ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சி யாளர் ரிக்கி பாண்டிங் அந்நாட்டு வீரர்களை எச்சரித்துள்ளார்.   இது குறித்து அவர் கூறியதாவது, “விண்டீஸ் வீரர்கள் அதிவேக பவுன்சர் களால்   ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் அடுத்தடுத்து சரிந்தது. அதே யுக்தியை இந்திய வீரர்களும் நமக்கு  எதிராக நிகழ்த்தக் காத்துக் கொண்டி ருக்கிறார்கள். இந்திய அணியின்  வேகப்பந்து வீச்சாளர்களான ஜாஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் சூப்பர் பார்மில் இருப்பதால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப் பது நல்லது. இதனால் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய வீரர்களும் இந்திய அணியிடம் கவன மாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.