உலகக்கோப்பை தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. லார்ட்ஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை புரட்டி எடுத்தது. இந்த ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடைபெற்றது. வழக்கத்திற்கு மாறாக இந்திய ரசிகர்கள் மைதானத்தில் திரளாக அமர்ந்திருந்தனர். ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 285 ரன்கள் இலக்கை துரத்தி சென்ற இங்கி லாந்து அணி தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது. விக்கெட்டுகள் சரிந்தாலும் இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் பொறுப்பாக விளை யாடி ரன் மழை பொழிந்தார். ஸ்டோக்ஸ் அடித்த ஒவ்வொரு பவுண் டரிக்கும் இந்திய ரசிகர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். இங்கிலாந்து அணி தோற்கும் சமயத்தில் இந்திய ரசிகர்கள் துயரத்துடன் போட்டியை ரசித்தனர். இங்கிலாந்து வீரர்களுக்கு ஆதரவு தந்த இந்திய ரசிகர்கள் இங்கிலாந்தில் பணியாற்றுபவர்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. நம் இனம் வேறு என்றாலும் நமக்கு வாழ்வு தரும் நாட்டை தம் தாய் நாடாக நினைக்கும் இந்திய மக்களை இங்கிலாந்து மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.