tamilnadu

img

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடந்த முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்து, நியூசிலாந்து அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணியின் ரோஹித் சர்மா 40 பந்துகளுக்கு 65 ரன்களும், கேப்டன் விராட் கோலி 27 பந்துகளுக்கு 38 ரன்களும், கே.எல்.ராகுல் 19 பந்துகளில் 27 ரன்களும் அணிக்கு சேர்த்துள்ளனர். 

இந்நிலையில் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. இந்த போட்டி டையில் முடிந்ததால், சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இந்த சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 6 பந்துகளில் 17 ரன்கள் குவித்தது. இதனால் இந்தியா ஒரு ஓவரில் 18 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் களம் இறங்கினர். 

முதல் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. முடிவில், கடைசி 2 பந்தை எதிர்கொண்ட  ரோகித் சர்மா, 2 சிக்கசர் அடித்த நிலையில், மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா இந்த தொடரை கைப்பற்ற உள்ளது.