tamilnadu

img

குற்றப்பத்திரிக்கையில் தோனியின் பெயர்?

அம்ரபாலி மோசடி விவகாரம்

பிரபல தொழிலதிபர் அனில் குமார் தலைமையில் அம்ர பாலி குழுமம் 2003-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. ரியல் எஸ்டேட் துறை நிறுவன மான அம்ரபாலி  வீடு கட்டி கொடுக்கும் வேலையை செய்து தொடக்கத்தி லேயே நல்ல வளர்ச்சி கண்டது.   தனது நிறுவனத்தை மேலும் வளர்ச்சி யடைந்த கார்ப்பரேட்டாக மாற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை விளம்பர தூதரக நியமித்தது. தோனி விளம்பரத்தில் நடிக்க ஆரம்பித்தவுடன் வீடு கட்டு வதற்கான முன்பதிவு தாறுமாறாக எகிறி யது. தோனியின் விளம்பரத்தால் ரியல் எஸ்டேட் துறையில் நன்றாகக் கல்லா கட்டிய அம்ரபாலி குழுமம் கல்வி, பொழுதுபோக்கு, பண்பலை வானொலி, உணவகம் என சகல வியாபாரத்திலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. 

இந்நிலையில், அம்ரபாலி நிறு வனம் வீடுகட்ட முன்பதிவு செய்தவர்களி டம் பணத்தைப் பெற்று வீடு கட்டித் தராமல் ஆயிரக்கணக்கான கோடி களை ஏமாற்றி மோசடி செய்யப் பணம் கட்டி ஏமாந்தவர்கள் தில்லி நகர காவல் துறையிடம் புகார் மனு அளித்தனர். போதாக்குறையாக கிரிக்கெட் வீரர் தோனியின் விளம்பரத்தால் தான் நாங்கள் ஏமாந்தோம், அவரையும் இந்த மோசடி வழக்கில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்க தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு நவம்பர் 27 அன்று அம்ரபாலி குழு மத்தின் தலைவரும், நிர்வாக இயக்கு நருமான அனில் குமார் சர்மா, குழு அதிகாரிகள் சிவ் பிரியா, மோஹித் குப்தா மற்றும் பலர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் 406, 409, 420 மற்றும் 120 பி பிரிவுகளின் கீழ் நம்பிக்கை மீறல், மோசடி மற்றும் குற்றச் சதி போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. கடைசியாக தோனியின் பெயரும் சேர்க்கப்பட்டது.

தோனியின் மனைவியும் சிக்குகிறார்?

அம்ரபாலி நிறுவனத்தில் தோனி விளம்பர தூதராக இணைந்த பொழுது அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தோனியின் மனைவி சாக்ஷி பெயரில் “அம்ரபாலி  மஹி” என்ற இணை நிறுவனத்தைத் துவக்கினார். இந்த நிறுவனத்தின் தலைமை நிறுவன மாக அம்ரபாலி இருப்பதால் தோனியின் மனைவிக்கும் சிக்கல் உருவாக வாய்ப்புள்ளது.  

மோசடி எவ்வளவு? 

கிரேட்டர் நொய்டா என அனைவராலும் அழைக்கப்படும் நொய்டா, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 40,000-க்கும் அதிகமானோர் வீடு கட்டுவதற்காக 2,647 கோடி ரூபாய் பணத்தை அளித்துள்ளனர். வீடு குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டிக்கொடுக்கப்படும் காலக்கெடு அளித்ததால் பணம் கொடுத்த மக்கள் நிம்மதியாக இருந்தனர். காலக்கெடு முடிந்த நிலையில் வீடு கட்டும் பணியை கூட துவங்காமல் இருந்ததால் பணம் கொடுத்தவர்கள் வீடு தொடர்பாகக் கேள்வி கேட்டவுடன் அம்ரபாலி அலுவலர்கள் கையை விரித்துள்ளனர். வாடிக்கையாளர்கள் மூலம் தான் மோசடி நிகழ்வு வெட்ட வெளிச்சமாகியது. 

அடுத்தது என்ன? 

பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியை பயன்படுத்தித் தான் பணத்தை வசூல் செய்தனர். நாங்கள் அனைவரும் தோனியால் தான் ஏமாற்றப்பட்டோம் எனக் கொந்தளித்துள்ளதால், அம்ரபாலி மோசடி வழக்கில் தோனிக்கும் பங்குள்ளது என்ற பெயரில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றத்தின் முடிவு படி தோனிக்கு எந்த வகையில் சிக்கல் உருவாகும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.கிரிக்கெட் உலகில் நற்பெயரைப் பெற்ற தோனி மோசடி வழக்கில் சிக்கியிருப்பதால் இந்திய விளையாட்டு உலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.