tamilnadu

img

வங்கதேச பிரதமர் பங்கேற்பு

பிங்க் டெஸ்ட் போட்டிக்கான சிறப்பு ஏற்பாடு களால் கொல்கத்தா நகரமே பிங்க் (இளஞ்சிவப்பு)  வண்ணத்தில் காட்சி அளிக்கிறது. 750 மீ நீளத்தில் உள்ள ஹவுரா பாலத்திற்கு பிங்க் வண்ண லெட் பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. மைதானம் அருகே பெரிய ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது. வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர். பிசிசிஐ தலைவரும், பிங்க் டெஸ்ட் நாயகனுமான கங்குலி, முன்னாள் வீரர்கள் தெண்டுல்கர், டிராவிட், லக்‌ஷ்மண், ஹர்பஜன் சிங், அஜித் அகர்கர் ஆகியோர் இந்த வரலாற்றுத் தருணத்தில் பங்கேற்றனர். ராணுவ பேண்ட் வீரர்கள் மூலம் இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.