tamilnadu

img

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

ஐபிஎல் - 2019 போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஆனால் போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வரும் நிலையில் போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூருவில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி முதல் இதுவரை சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 8 பேரை, நகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 29 செல்போன்களும், ரூ.39.49 லட்சம் பணமும் பறிமுதல் செய்துள்ளனர்.  


;