இங்கிலாந்து நாட்டின் கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் சிட்டி அணி ஐரோப்பாவில் நடை பெறும் அனைத்து சீசன்களிலும் அசத்தலாக விளையாடக் கூடியது. 2019-ஆம் ஆண்டுக்கான இங்கிலிஷ் பிரீமியர் லீக் தொடரிலும் மான்செஸ்டர் சிட்டி அணி தான் சாம்பியன் பட்டம் வென்றது. இத்தகைய சிறப்புடைய மான்செஸ்டர் சிட்டி அணி ஐரோப்பிய அளவிலான ஒப்பந்தம் மற்றும் விதிமீறிச் செயல் பட்டதாகக் கூறி 2 ஆண்டு தடை உத்தரவு பெற்றுள்ளது. இந்த தடையால் ஐரோப்பிய அளவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை உருவாகி யுள்ளது. இந்த தடை உத்தரவை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக மான்செஸ்டர் சிட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது. விளம்பரம், கேட் ரசீதுகள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலம் நன்றாகக் கல்லா கட்டிய மான்செஸ்டர் சிட்டி அணி திடீர் தடை உத்தரவு பெற்றுள்ளதால் கால்பந்து உலகின் வசதி படைத்த கிளப் அணிகள் பிரிவில் உள்ள இடத்தை விரைவில் இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.