காஞ்சிபுரம், மார்ச் 4 - காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் தொடர்ந்து ஏற்படும் மின் வெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குருவிமலை கிளை சார்பில் பிப்ரவரி 29 ஆம் தேதி நடை பெறும் என அறிவிக்கப்பட்டது. இது அறிந்த துறை சார்ந்த அதிகாரிகள் சிபிஎம் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மார்ச் 4 ஆம் தேதிக்குள் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்வாரிய பொறியாளர் அரி தெரி வித்திருந்தார். இதுகுறித்து தீக்கதிரில் விரிவான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மின்வாரிய பொறியாளர் அளித்த உறுதிமொழியின் படி, வெள்ளைகுளம் துணைமின் நிலையத்தில் இருந்து புதன்கிழமை (மார்ச் 4) மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாகரல் துணை மின் நிலைய ஊழியர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குருவிமலை கிளைக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரி வித்தனர்.