மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் அக்டோபர் 10 ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் அருகே மறியல் போராட்டத்தை விளக்கி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மின்வாரிய ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் டி.ஸ்ரீதர், சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், வட்டத் தலைவர் ஆர். பாபு, செயலாளர் ஜி. படவேட்டான், நிர்வாகிகள் ஆர்.மதியழகன், கே.சங்கர் ,பி.கேசவன், ஏ.வெங்கடேசன், ஜே. சிவராமன், சி கலைமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.