காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் என்.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். செயலாளர் கே.ஜெயக்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.லெனின் உட்படபலர் கலந்து கொண்டனர்.