காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் வயது வரம்பு தளர்வு, தேர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை ஆட்சியர் பா. பொன்னையா வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வி.சுந்தரமூர்த்தி, கலால் உதவி ஆணையர் ஜீவா, தனித்துணை ஆட்சியர் மாலதி ஆகியோர் உடன் உள்ளனர்.