tamilnadu

img

மதர்சன், யூரோலைப் தொழிலாளர் பிரச்சனையில் தலையிடுக ஸ்ரீ பெரும்புதூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூர், அக்.10-  காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் மதர்சன் நிறுவனம் மற்றும் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் பகுதியில் செயல்பட்டுவரும் யூரோ லைப் ஆகிய தொழிற்சாலை களில் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், ஊக்கத் தொகை, தொழி லாளர்களைப் பழிவாங்கும் போக்கைக் கைவிட வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழி லாளர்கள் தொடர் போராட்ட த்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதர்சன் தொழிற்சாலை யில் கடந்த ஒரு மாதமாக வும், யூரோ லைப் தொழிற்சாலையில் கடந்த மூன்றாம் தேதியிலிருந்தும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த இரண்டு தொழிற்சாலை பிரச்சனைகளிலும் மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை தலையிட்டு உடனடியாக  பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி  சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் புதனன்று (அக். 9) ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் தலைமை தாங்கினார். தலைவர் எஸ்.கண்ணன்,  துணைச் செய லாளர் பகத்சிங்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.