காஞ்சிபுரம், நவ. 14- மாமல்லபுரத்திற்கு இந்திய பிரதமர் மற்றும் சீன ஜனாதிபதி ஆகியோர் வருகை தந்தபோது சாலை யோர கடைகள் அகற்ற ப்பட்டன. தலைவர்கள் சென்ற பிறகு கடைகள் அமைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தலைவர்கள் சென்ற பிறகும் கடை அமைக்க அதிகாரிகள் மறுத்தனர். இதனைத் தொடர்ந்து சிஐடியு சார்பில் சாலை யோர கடைகள் அமைக்க அனுமதி வழங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. பின்னர் நிரந்தரமாக இடம் ஒதுக்கப்படும் வரை, தற்காலிகமாக ஏற்கனவே கடை நடத்திய இடங்களில் கடை நடத்தலாம் என அதிகாரிகள் அனுமதித்தனர். ஆனால், தற்போது வெண்ணை உருண்டை பாறை, கோவளம், கிழக்கு கடலோர சாலை போன்ற பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்யக்கூடாது என காவல்துறையினர், தொல்லியல் துறையினர், அறநிலையத் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் தொடர்ந்து வியாபாரிகள் கடை நடத்தக் கூடாது என அச்சுறுத்துகின்றனர். அரசு துறைகளில் இந்த நடவடிக்கையை கண்டி த்தும், வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும், சுற்றுலா பயணி களுக்கு இலவச குடிநீர், கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி முறைசாரா தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பகத்சிங்தாஸ் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், உழைக்கும் பெண்கள் சங்க மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் எம். கலைச்செல்வி, சிஐடியு மாவட்டத் தலைவர் இ.ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் கே. பழனி சாமி, மாவட்ட துணைச் செய லாளர்கள் ஆர். பிரேம குமாரி, முரளி, மாவட்ட பொருளாளர் கே.வேதகிரி, மாவட்டக்குழு உறுப்பினர் மாபூபீ, சசிதரன், சி.செல்வ குமார், சிபிஎம் நகரச் செய லாளர் சி.சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட த்தை நிறைவு செய்து சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் பேசினார்.