மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் சென்னை திருமங்கலத்தில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் மேற்கு கிளைத் தலைவர் என்.அச்சுதன் தலைமையில் செவ்வாயன்று (அக். 22) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எம்.சேட்டு வரவேற்றார். இதில் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாமணி, துணைத் தலைவர் ஏ.நாகராஜன், செயலாளர் டி.கே.சம்பத்ராவ், பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர் ஏ.என்.ஹேமமாலினி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மேற்கு கிளைச் செயலாளர் எஸ்.தசரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
*********
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பொற்றோர் நல அமைப்பின் சார்பில் செங்கல்பட்டு மேற்பார்வை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.