காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு திங்கட்கிழமையன்று (ஜூன்8) தினந்தோறும் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சுந்தரமூர்த்தி, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.