tamilnadu

img

தமிழகத்தில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில்  15 பேர் பலி

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் தூத்துக்குடி அருகே நடந்த இரு விபத்துகளில்  15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திஉ ள்ளது. 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேரில் அதிகாலை 3 மணியளவில் தனியார் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சென்னையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற காரில் பயணித்த 7 பேரும், பேருந்தில் பயணித்த 2 பேரும் பலியாயினர். ஆம்னி பஸ் டிரைவர், ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 8 பேர் உட்பட 9 பேர் பலியாயினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த திருத்தங்கல் கிராமத்திலிருந்து பயணிகள் வேன் ஒன்று திருச்செந்தூர் நோக்கி சென்றது. இன்றுஅதிகாலை 1.30 மணியளவில் திருநெல்வேலி - திருச்செந்தூர் ரோட்டில் கருங்குளம் என்ற இடத்தில் வேன்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 6 பேர் பலியானார்கள். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.