உளுந்தூர்பேட்டை. ஆக, 22- வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளை பொருட்களை வழங்கிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 25 லட்சம் ரூபாயை வழங்காமல் இருந்ததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத் தின் விளைவாக அனைத்து விவசாயி களுக்கும் பணம் வழங்கப்பட்டது. உளுந்தூர்பேட்டை வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொரோனா காலத்தில் விவசாயிகள் தங்க ளது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்தனர். உளுந்தூர்பேட்டை நகரை சேர்ந்த முகவர் ஒருவர் விவசாயி களிடமிருந்து ஒழுங்குமுறை விற்பனை கூடத் திற்கு வந்த தானியங்களை பெற்றுக் கொண்டு அதற்கான தொகை ரூபாய் 25 லட்சத்தை தராமல் மூன்று மாதங்களாக இழுத்தடிப்பு செய்து வந்தார்.
இதன்மீது காவல்துறையில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகளுக்கு முழு தொகையை யும் வழங்கக் கோரி ஒழுங்குமுறை விற்ப னைக்கூடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மேலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நேரில் முறையிடப்பட்டது. அதன் விளை வாக விழுப்புரம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை செயலாள ரான க.ஆறுமுகராஜன் இந்த கோரிக்கை யின் மீது நடவடிக்கை எடுத்து விவசாயி களுக்கு வழங்க வேண்டிய 24 லட்சத்து 73 ஆயிரத்து 863 ரூபாய் பட்டுவாடா செய்யப் பட்டுள்ளதாக சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.ரகுராமனுக்கு பதிவு தபால் மூலம் தக வல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் போராட்டம் மற்றும் முயற்சியின் விளைவாக விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.